மகளிர் தினம்


 

உலக மகளிர் தினம்
(International Women's Day)


பிப்ரவரி மாதம் 14 ம் தேதி காதலர்கள்(?) தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடிய மேற்கத்திய நாடுகள் வரும் மார்ச்-8 அன்று உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தயாராகிவருகின்றன. மேற்கத்திய கலாச்சாரம் எல்லாவற்றிற்கும் ஒரு தினம் வரையறுத்துதான் வைத்துள்ளது. பெற்றோர்கள் தினம், அன்னையர் தினம், தொழிலாளர் தினம், ஏன் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கும் ஒருதினம். இவ்வாறான தினங்களில் அதற்குறிய கொண்டாட்டங்கள் கொண்டாடுவது வழக்கம். உலகமகளிர் தினத்தில் பெண்கள் சம உரிமைகள் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் ஆய்ந்து பெண்சமுதாயம் வளர்ச்சியடைய பாடுபடப்போவதாக சொல்கிறார்கள்.
 
உலக மகளிர் தினம் உருவான பின்னணியை சற்று பார்த்தால் இப்போதுதான் அவர்கள் சிந்திக்கத் துவங்கியிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. பெண் அடிமைத்தனம் எங்கு இருக்கிறன்றதோ அங்குதான் பெண் சுதந்திரம் மற்றும் பெண்கள் எழுச்சி தேவைப்படுகிறது. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமஉரிமை மையமாக வைத்து கி.பி. 1909-ல் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியினர் முதல் முதலாக மகளிர் தினத்தை பிப்ரவரி மாதம் 28ம் தேதி கொண்டாடினர்.
 
இதன் முடிவாக 1911, மார்ச் 19 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றம் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அரசு அலுவலகங்கள் முன் திரண்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் சமஉரிமை அளிக்கவேண்டும் எனப் போராடினர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சியினால் ஜக்கிய ராஜ்யம், ருஷ்யா போன்ற நாடுகளில் வேறுபட்ட நாட்களில் 1917 வரை இவ்வாறான குரல்கள் ஒலித்து வந்தன. 1917-க்குப்பின் உலக மகளிர் அமைப்புகள் ஒன்று கூடி மகளிர் தினத்தை மார்ச்-8 என்று கட்டமைத்தனர். இத்தகைய பெண்கள் போராட்டங்களால் 1945-ல் சான் பிரான்ஸிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் ஒன்றுகூடி பெண்கள் சமஉரிமை (gender equality as a fundamental human rights) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மேற்கத்திய நாடுகள் உலகறிய தாங்கள்தான் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம் என்கிறார்கள். மகளிர் அமைப்புகள் பெண்கள் சமஉரிமைக்காக போர்க்கொடி ஏந்தி போராடி வருகிறார்கள். இத்தகைய நிகழ்வுகளாலும், போராட்டங்களாலும், மகளிர் அமைப்புகளின் செயல்களாலும் பெண்சமுதாயம் முன்னேற்றமடைந்துவிட்டதா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருக்கின்றனவா? என்றால் இல்லை என்றே கூறலாம்.

மேலை நாட்டினர் எதில் முன்னேறுகிறார்கள் எனில் பெண்ணியத்தின் கண்ணியம் களங்கப்படுத்துமுகமாக பெண்களின் ஆடைக்குறைப்பு செய்து அழகிப்போட்டி என்ற பெயரில் ஆபாசப்போட்டிகள் நடத்தி மனம் மகிழ்கிவதிலும், பெண்களை ஆபாசத்தின் அடையாளமாக (Sex Symbel-ஆக) மட்டும் பாவித்து வருவதிலும் முன்னேறியிருக்கிறார்கள். கருப்பைச் சுதந்திரத்தில் முன்னேறியிருக்கிறார்கள். மனிதப் பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் ஓரின திருமணங்கள் (லெஸ்பியன் மற்றும் கே) அங்கீகாரத்துடன் நடந்தேறி வருகின்றனவே இவற்றில் இவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். மேலும் பெண்கள் சமஉரிமை பேசப்படும் இடமெல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், கற்பழிப்புகளும் அதிகமாகவே நடைபெறுகின்றன.

த்தகைய விஷயங்களில் வீறுநடைபோட்டு வரும் இவர்கள், இஸ்லாத்தில் பெண்சுதந்திரம் இல்லை, பெண்களுக்கு சமஉரிமை இல்லை என்றெல்லாம் ஊடகங்கள் வாயிலாக நூதன முறையில் அவதூறுப் பிரச்சாரங்கள் மேற்கொள்கிறார்கள்.
 
"இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் இல்லை", "இஸ்லாம் பெண்களை அடிமையாக நடத்துகிறது", "பர்தா பெண்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றது"  ன்பதெல்லாம் இவர்களின் போலிக் கருத்துப்பிரச்சாரங்கள். இவ்வாறான போலிப் பிரச்சாரங்களால் இஸ்லாத்தின் வளர்ச்சி தட்டுப்பட்டுவிடாது. இவர்களுக்கு வேண்டுமானால் உலக மகளிர் தினத்தில் ஒன்றுகூடி பெண்கள் சமஉரிமைகள் பற்றியும், சுதந்திரம் பற்றியும் விவாதிக்க மார்ச்-8 தேவைப்படலாம்.

பெண்உரிமை பற்றியும், பெண் வாழ்க்கைத் திட்டம் பற்றியும், பெண்ணியத்தின் கண்ணியம் பற்றியும் இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அழகாக அடித்தளமிட்டுவிட்டது. ஆண் பெண் கலத்தல் இல்லாமல் பெண்கள் கல்வி கற்பதிலோ, பணிபுரிவதிலோ எந்தத் தவறுமில்லை. தற்போதை காலகட்டத்தில் முஸ்லிம் பெண்கள் உயர்கல்வியான மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளிலும் கணிசமாக முன்னேறிந்துகொண்டிருக்கின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்கான சூழல்களும் உருவாகிக்கொண்டுதான் வருகின்றன. இஸ்லாமிய சமுதாய அமைப்பு இத்தகைய முன்னேற்றங்களை தங்களின் கடமையான எண்ணி செய்யவேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆண்களுக்கு சற்று அதிகமான கடமை இருப்பது போன்று, இல்லற வாழ்க்கையில் பெண்கள், ஆண்களைவிடச் சற்று அதிகமான பொருப்புகளை ஏற்றாகவேண்டியது நியதி. குழந்தை வளர்ப்பில் அதிகம் பங்கெடுத்துக்கொள்வது பெண்கள். ஒவ்வொறு ஆணின் வெற்றிக்குப்பின் ஓர் பெண் இருக்கிறாள் தாயகவோ, மனைவியாகவோ அல்லது சகோதரியாகவோ அல்லது மகளாகவோ.

சமஉரிமை பேசும் மேற்கத்திய நாடுகளில் பெண்எழுச்சி ஏற்பட்டதன் விளைவு கருப்பைச் சுதந்திரம் அதிகமாகி இல்லறம் என்ற முறை தகர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் காப்பகங்கள் அதிகரிக்கின்றன. குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு வருடத்திற்குள் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்களின் பாசம், பரிவு, அன்பு, அரவணைப்பு கிடைக்காமல் குழந்தைகள் வளர்கின்றன. பின்விளைவு முதியோர் காப்பகங்களும் மேற்கத்திய நாடுகளில் அதிகமாக உருவாகின்றன. இந்த நிலை மேற்கத்திய நாடுகளில் மட்டும் என்றில்லை அதன் சாயலை நம் நாடுகளிலும் காணலாம். இவர்களின் இவ்வாறான முன்னேற்றம் நமக்குத் தேவையில்லை.

முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் கல்வியறிவில் பின்தங்கியிருக்கிறார்கள், வேலைவாய்ப்பில் பின்தங்கியிருக்கிறார்கள் இதற்குக் காரணமாக "பர்தா முறை" பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று மேற்கோளிடுகிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் கல்வியறிவு, அரசு வேலைவாய்ப்பு போன்றவைகளில் பின்தங்கியிருப்பது ஏற்கவேண்டிய ஒன்றுதான்.

இக்கருத்தில் கூறப்படுவதுபோல பெண்கள் மட்டும் அல்ல, முஸ்லிம் ஆண்களும் கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்புகளில் பின்தங்கியே இருக்கிறார்கள். காரணம் முஸ்லிம் சமுதாயம் மற்றவர்களால் அதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படாமல் ஒடுக்கப்படுகிறது என்பதே உண்மை.

உதாரணமாக இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் போராடிவருகிறார்கள். இந்நிலையில் இந்திய அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். இத்தகைய நிலை மாறவேண்டுமானால் முஸ்லிம்களும் கல்வி நிலையில் உயரவேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவேண்டும். அரசு வேலைவாய்ப்புகள் முதல் அரசியல் வரை முஸ்லிம்களும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும்.

ஆண், பெண் கலத்தல் மூலம் ஏற்படும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கான வழிகளை இஸ்லாம் அடைக்கிறதே தவிர, பெண்களின் முன்னேற்றத்தையோ, சுதந்திரத்தையோ அல்ல.
 

0 Response to "மகளிர் தினம்"

Post a Comment